Tuesday, June 5, 2012

இது ஒரு கனவா....

பொன் பந்தை
 பறித்து வர வா...
புது தென்றலால்
  வருடி விட வா...
மிதக்கும் கட்டில்
  விண்ணில் இட வா...
பட்டு துணியில்
  மெத்தை அமைக்க வா...
இரவில் குயிலை
   பாட சொல்ல வா...
அவ்விசைக்கு அலைகளை
  ஆட சொல்ல வா...
மேகம் கொண்டு
  போர்த்தி விட வா...
மெதுவாய் உன்னை
  நெருங்கி விட வா...
கழுத்தில் விண்மீன் மாலையிடவா...
 மஞ்சத்தில் சாய்கையில்
 மார்போடு அணைக்கவா...

No comments:

About Me

My photo
கவி எழுதும் சிறு கலைஞன்.......