Sunday, April 10, 2011

பிரிவு...

வழியோடு விழியாடும்...
நீயின்றி துயர் பாடும்....
முகிலும் முகம் சுளிக்கும்...
முழுமதியையும் அது மறைக்கும்....
விண்மீனும் இமை திறக்காது...
நீயின்றி அது சிரிக்காது....
கருவானில் காற்றிருக்காது
கன்னியவள்
என் காட்சியில் இல்லாவிடின்..........

இது போல் இரவு பயணம் இன்றியமயாதது.............. :) :)

என் கற்பனைக்கு எட்டிய
பெண்
என் முன் இருக்கையில்
அமர்ந்திருக்கிறாள்
இருள் சூழ்ந்த பேருந்திலும்
அவள் தூங்கும் அழகினை
ஜன்னலோர கண்ணாடியின்
வழியில் ரசித்து கொண்டிருக்கிறேன்
என் கைபேசி நண்பனின்
வெளிச்சத்தைக்கொண்டு.......!!!
அவளிடம் சொல்லிவிடதிர்கள்..... ;)

பிறை நிலவு
சட்டென்று அதிகமாய்
வெளிச்சத்தை பிரதிபலிக்கிறது.....
என்னவள் முன்னிருக்கையில்
கண் மலர்ந்துவிட்டாலோ.........
?????????????




என் அருகின்
முன் இருக்கையில்
அவள் இருக்கையில்
என் உறக்கம்
கண் பிரிந்து
களவு போனது.......

காதலும் இல்லை
காமமும் இல்லை
நட்பும் இல்லை
நாட்டமும் இல்லை
என் கற்பனை ஓவியம்
கண் முன் உயிர்பெற்றிருக்கையில்
கண்டு களிப்பது தவறில்லையேல்........


இந்த பேருந்தின்
இரவு பயணத்தில்
இரு பிறை நிலவுகள்.....
என்னுடன் பயணிக்கிறது
ஒன்று என்னை
தொடர்கிறது தூங்காமல்
என்னுடன்........
மற்றொன்றும் தொடர்கிறது
முன்னங்கையில் முகம் வைத்துக்கொண்டு
மெல்லிசையில் மிதந்துகொண்டு
தென்றலை அணைத்துக்கொண்டு
இதமாய் இவ்விரவில் துயில் தழுவிக்கொண்டு.........
ஜன்னலோர முதலொன்று
அதன் அழகில்
என்னை
உருகச் செய்கிறது.......
என் முன்னிருக்கையில்
இருக்கும் மற்றொன்று
அந்தச் சிறு இடைவெளியில்
என்னை
மறுகச் செய்கிறது........



பயணம் முடிகையில்
இருள்வரா விடியல்
வந்துவிட்டது................... :) :) :)

Sunday, February 27, 2011

போதும்.....

என் பாடல்களுக்கு
வரிகள் தேவையில்லை
ஓசையே போதுமானது....
என் கவிதைகளுக்கு
சொற்றிடை தேவையில்லை
நடையே போதுமானது....
என் கனவுகளுக்கு
உறக்கம் தேவையில்லை
உன் முகம் போதுமானது....
என் காயங்களுக்கு
மருந்து தேவையில்லை
காலமே போதுமானது....
என் வாழ்கைக்கு
நீ தேவையில்லை
நினைவுகளே போதுமானது....
என் முடிவுக்கு
விடிவு தேவையில்லை
மடிவதே போதுமானது....
சொல்லாத வார்த்தைகள்
மட்டுமே....
என் எண்ணங்களை
சரிவர பிரதிபலித்தவை....
உன்னிடம் மட்டும்....

Sunday, February 13, 2011

ஒரு பாடல்... முதற் பாடல் :) (just a try.......)

கனவிலே
என் கண்களின் கண்மணியாக
அவளும் இருக்கிறாள்......
நேரிலே
என் கண்முன் ஒருகணம்
நிற்ககூட மறுக்கிறாள்......
இது எந்த ஜென்ம பாவம்
தாங்கவில்லை சோகம்
தடங்கள் தடுமாறி
தரையில் இருந்தும்
நான் விழுகிறேன்.......

அடி உனக்கேன் உனக்கேன் என் மனம் புரியவில்லை.....
ஆனால் உன்னை மறக்க என்னால் முடியவில்லை....

பெண்ணே உன்னை தேடி
பூக்கள் கொண்டு வந்தேன்
அதில் உனக்கு பிடித்தது
எதுவும் இல்லை என்றாய்....

காதல் சொல்ல நானும்
கவிதைகள் கொண்டு வந்தேன்
அதை கையில் வாங்கி
கிழித்து எரிந்து விட்டாய்....

கடைசியில் ஒருநாள் நானே
நேரில் வாய் திறந்தேனே
என்னை எப்படி உனக்கு
பிடிக்கும் என்றாய்......

இளமனம் அழுதது.....
இதயமே வெடித்தது.....
இன்னும் என்ன வாழ்கைதான்
இறந்திட துடித்தது....


அடி உனக்கேன் உனக்கேன் என் மனம் புரியவில்லை.....
ஆனால் உன்னை மறக்க என்னால் முடியவில்லை....

ஒரு மரத்தின் அடியில் தனியே நின்றிருந்தேன்....
என் தனிமை சுமையை அதன்மேல் சாய்த்திருந்தேன்.....

சிறுவிரல்கள் என் தொலை தட்டியது...
நான் மெதுவாய் திரும்ப மின்னல் வெட்டியது...

அவள் I LOVE YOU
என்னிடம் சொன்னாலே.....
இதுதான்... என் காதல்.......................
இவள்தான்.... என் தேடல்............................
கைசேர்ந்தது...........

வானம் ரெக்ககட்டி பறக்குது......
எதனாலே....
இந்தபூமி என்ன சுத்தி வருகுது......
அதனாலே....
நிலவும் இங்க பகலுல ஜொலிக்குது......
எதனாலே....
நீலவானம் இப்போ செவக்குது......
அதனாலே....

அடி உனக்கேன் உனக்கேன் என்னை பிடித்தது.....
உன்னால் எந்தன் உலகம் தலைகிழாகுது....

இந்த காதல் மயக்கம்
தீண்டும் எந்த உயரம் தான்........
இந்த காதல் மயக்கம்
தீண்டும் எந்த உயரம் தான்........

Tuesday, January 11, 2011

எனக்கு தெரிந்தவரை......

பூவை கேட்டால்
பரித்துகொடுப்பது
நட்பு...
பூந்தோட்டம்
அமைத்துகொடுப்பது
காதல்...

என்ன சொல்வது....

வலியை மொழிபெயர்க்க
வார்த்தை இல்லை....
ஆனால்
என் வார்த்தைகள் கூட
சிலருக்கு புரிவதில்லை.....

:)

நீண்டநாள் குழப்பம்
இன்று தீர்ந்தது...
நீ சொல்லிய
சில வார்த்தைகளில்
நான் ஏமார்ந்தது
புரிந்தது...
என்றாலும் சிரித்தேன்
இன்றாவது எனக்கு
தெரிந்தது....

Monday, January 10, 2011

எந்தன் உணர்வு.....

ஒரு அழகான உறவை
உடைத்துவிட்டேன்
என் வானில் நிலவை
இழந்துவிட்டேன்
இமையோரம் என் சோகம்
மறைத்துவிட்டேன்
என் வாழ்வில் இருள்கொஞ்சம்
சேர்த்துவிட்டேன்
சுமை தாங்க முடியாமல்
சொல்லிவிட்டேன்
சொன்னாலும் புரியாது என்று
தெரிஞ்சிகிட்டேன்
வலியோடு அவள் கையை
விட்டுவிட்டேன்....

About Me

My photo
கவி எழுதும் சிறு கலைஞன்.......