என் கற்பனைக்கு எட்டிய
பெண்
என் முன் இருக்கையில்
அமர்ந்திருக்கிறாள்
இருள் சூழ்ந்த பேருந்திலும்
அவள் தூங்கும் அழகினை
ஜன்னலோர கண்ணாடியின்
வழியில் ரசித்து கொண்டிருக்கிறேன்
என் கைபேசி நண்பனின்
வெளிச்சத்தைக்கொண்டு.......!!!
அவளிடம் சொல்லிவிடதிர்கள்..... ;)
பிறை நிலவு
சட்டென்று அதிகமாய்
வெளிச்சத்தை பிரதிபலிக்கிறது.....
என்னவள் முன்னிருக்கையில்
கண் மலர்ந்துவிட்டாலோ.........
?????????????
என் அருகின்
முன் இருக்கையில்
அவள் இருக்கையில்
என் உறக்கம்
கண் பிரிந்து
களவு போனது.......
காதலும் இல்லை
காமமும் இல்லை
நட்பும் இல்லை
நாட்டமும் இல்லை
என் கற்பனை ஓவியம்
கண் முன் உயிர்பெற்றிருக்கையில்
கண்டு களிப்பது தவறில்லையேல்........
இந்த பேருந்தின்
இரவு பயணத்தில்
இரு பிறை நிலவுகள்.....
என்னுடன் பயணிக்கிறது
ஒன்று என்னை
தொடர்கிறது தூங்காமல்
என்னுடன்........
மற்றொன்றும் தொடர்கிறது
முன்னங்கையில் முகம் வைத்துக்கொண்டு
மெல்லிசையில் மிதந்துகொண்டு
தென்றலை அணைத்துக்கொண்டு
இதமாய் இவ்விரவில் துயில் தழுவிக்கொண்டு.........
ஜன்னலோர முதலொன்று
அதன் அழகில்
என்னை
உருகச் செய்கிறது.......
என் முன்னிருக்கையில்
இருக்கும் மற்றொன்று
அந்தச் சிறு இடைவெளியில்
என்னை
மறுகச் செய்கிறது........
பயணம் முடிகையில்
இருள்வரா விடியல்
வந்துவிட்டது................... :) :) :)
என் கற்பனைகள் கவியாய் பூத்திருக்கும் சிறு கவி தோட்டம்.......... It contains small Tamil poems in many topics.... even u can suggest some topics to write poem.....
No comments:
Post a Comment