Monday, November 9, 2009

தாய்மை......




தொப்புள் கொடி அறுக்கும் முன்பு என் மூச்சை
உள்ளே வைத்திருந்தாய்
நான் புவி கண்ட அந்நேரம்
என்னுயிர் எனதல்ல உனதென்று உணரவைத்தாய்
நீ
எந்த
குணமாயினும்
நிறமாயினும்
விலங்காயினும்
மொழியாயினும்
வழியாயினும்
உயிராயினும்
அனுவாயினும்
இயற்கயாயினும்
இறைவனாயினும்
இங்கு இந்த தாய்மைக்கு நன்றி கூறி ஓய்ந்தவர் எவறுமில்லை
இந்த சேய்க்கும் உள்ளிருக்கும் உணர்வுமிக்க பாசம்
அது ஒருநாளும் உலரந்துபோவதுமில்லை......
இது வார்த்தைகளை கோர்த்தெடுத்த வாக்கியமல்ல
எனக்கு எழுத கிடைக்கப்பெற்ற வரம்.....

உன்னருகில்... சில நொடிகள்...


உன் கன்னங்கள்
என் தோள்களில்
முத்தமிட்ட சில நொடிகளில்....
நான் என்னில்....
என்னிடம் ( என் இடம் ) இழந்தேன்.....

Friday, March 27, 2009

கண்கள்










மீன்களுக்காக வலைவீசுவர் 
இன்று மீன்கள் வலைவீசகண்டேன்.....

காதல்......

கண்கள் பேசுகின்ற வார்த்தை
இதற்கு இதழ்கள் இனி தேவையில்லை... 
கனவில் கானலாய் கட்டிபுரளும்
இதற்கு கரங்கள் இனி தேவையில்லை... 
இரு துருவ இணைப்பு 
இதற்கு இடையில் பாலங்கள் தேவையில்லை...
இறக்காமல் கிடைக்கும் சொர்கம்
இதற்கு இமை முடிய இடுகாடு தேவையில்லை.......

உன்னை நோக்கி.........

வருடுவாய் என்று
நினைத்தே
நெருங்குகிறேன்..........
ஆனால் ஒவ்வொரு
முறையும் 
கூடுதல் வலியோடு 
விடைபெறுகிறேன்......... 
எனினும்
மீண்டும்
வருவேன்
வருடினாலும் சரி........
வருத்தினாலும் சரி......

About Me

My photo
கவி எழுதும் சிறு கலைஞன்.......