Tuesday, May 20, 2008

வாழ்த்துக்கள்

எண்ணங்கள் தெளிவை தேடட்டும்..
முயற்சிகள் முடிவை நோக்கட்டும்..
கனவுகள் கண்முன் 
உயிர்பிக்கட்டும்..
உறவுகள் உறுதியாகட்டும்..
புதிய உறவுகள் உருவாகட்டும்..
நட்புக்குள் நட்பு பெருகட்டும்..
நாட்டில் நல்லவை ஓங்கட்டும்..
இயற்கை எழில் 
கெடாதிருக்கட்டும்..
இன்னல் தரும் சீற்றங்கள்
இனியாவது குறையட்டும்..
இன்பங்கள் நிறையட்டும்..
துன்பங்கள் தூங்கட்டும்.......
எதிர்காலம் நம்மை எதிர்நோக்குகின்றது
இறந்தகாலம் இன்புற வழி அனுப்புகிறது
புத்தாண்டில் புதிய தடம் பதிப்போம்
யுகம் ஜெயிப்போம்.........!

Sunday, April 20, 2008

தேவதை

உன் இமைகள் திறந்த நேரத்தில்
என் விழிகள் மூட மறந்துவிட்டேன்
இன்றென்னை இழந்துவிட்டேன் .....
இவள் எனக்கென பிறந்தவளோ
எழில் கொஞ்சும் புது மலரோ
நிலவின் பிம்பமோ
நீள்விழி நீந்துமோ
உயிர்கொண்ட சிலையோ
உலராத பூவிதழோ
அழகின் சிரிப்போ
அபூர்வ படைப்போ
தென்றலின் உருவமோ
தெவிட்டாத அமுதமோ
தீண்டாத தழலோ
தித்திக்கும் தேனோ
கண்களில் காதலோ
இதென்னுடைய கானலோ
கார்குழல் இரவோ
கதிரவனங்கு உதிக்குமோ
செதுக்கிய சிற்றிடையோ
சிறுபார்வை ஒருமுறையோ
செழித்த தென்னையோ
தேர்ந்தெடுத்து வதைப்பது என்னையோ
நீ (இவள்) தான் தேவதையோ..............!

Thursday, March 20, 2008

கவியால்

கவிதையை பற்றி
கவி எழுதுவது சற்று கடினம்தான்
ஆதலால்தான் என்னவோ
கவிதையை ஓவியமாய்
படைத்துவிட்டான் பிரம்மன்
உன் அழகில்......
இப்படிக்கு
உன்னை கவியாய் மாற்ற முடியாமல்
ரசித்து கொண்டிருக்கும்
குட்டி கலைஞன் ...... :-)

About Me

My photo
கவி எழுதும் சிறு கலைஞன்.......